சொலிடாரிட்டி ஏற்பாட்டில் யாழில் தொழிலாளர் தினம்

சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு சொலிடாரிட்டி நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த கவனயீர்ப்பு போராட்டத்தில் யாழ் மாவட்ட துப்புரவு பணியாளர்கள், தனியார் வியாபார ஸ்தாபனங்களில் தொழிலாளர்கள் கலந்துகொண்டிருந்தனர்.

மே 13ம் திகதி யாழ் மாவட்டச் செயலகத்தின் குறித்த ஊழியர்கள் பதாதைகளை ஏந்தி கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டதுடன் தொடர்ந்து மாவட்டச் செயலக கேட்போர்கூடத்தில் விழிப்புணர்வு நிகழ்வினையும் ஏற்பாடு செய்திருந்தனர்.

இந் நிகழ்வில் யாழ் மாவட்டதொழில் திணைக்கள சிரேஷ்டஉத்தியோகஸ்தர்,யாழ் பொலிஸ்திணைக்கள சிறுவர் பெண்கள் பிரிவு பொறுப்பதிகாரி,அரச தாதியர் சங்க செயலாளர், இலங்கை ஆசிரியர் சங்க உப தலைவர்,அரச பொது முகாமைத்துவ உதவியாளர் சங்க உபசெயலாளர்,சட்டஉதவி ஆணைக்குழுவின் சட்டத்தரணி,தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் யாழ் மாவட்ட இணைப்பாளர்,யாழ் மாவட்ட ஆரோக்கியமான வேலைச் சூழல் மற்றும் பால் நிலைசமத்துவத்துக்கானசெயற்குழுவின் சட்டத்தரணிகள்,சொலிடாறிற்றி நிறுவனநிகழ்ச்சித் திட்ட இணைபபாளர்,துப்புரவு பணியாளர்கள் மற்றும் தனியார் வியாபார ஸ்தாபனங்களில் தொழிலாளர்கள் கலந்துகொண்டனர்.

Jaff_ G B

Mayday_ Jaffna

Jaff_ G B.jpg 2

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435