ஜனாதிபதித் தேர்தல்: தபால்மூல வாக்களிப்பு ஒக்டோபர் 30, 31 இல்

ஜனாதிபதி தேர்தலுக்கான தபால்மூல வாக்கு பதிவுகள் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 30, 31 ஆம் திகதிகளில் இடம்பெறும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதேநேரம், பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் தேர்தல் அலுவலக உத்தியோகத்தர்கள் நவம்பர் மாதம் 01 ஆம் திகதி தபால்மூல வாக்குகளைப் பதிவு செய்யலாம் என்றும் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இந்த இரண்டு சந்தர்ப்பங்களிலும், தபால்மூல வாக்குகளை பதிவுசெய்ய முடியாத அரச அதிகாரிகள் நவம்பர் மாதம் 7ஆம் திகதி, மாவட்ட செயலகங்களுக்கு சென்று தபால்மூல வாக்கை பதிவுசெய்ய முடியும் என்றும் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435