ஜனாதிபதியை சந்திக்க வேலையற்ற பட்டதாரிகள் தீர்மானம்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை சந்தித்து தமக்கான வேலைவாய்ப்பு தொடர்பாக கலந்துரையாடுவதற்கு வவுனியா மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளின் கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

வவுனியா மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளிற்கிடையிலான கலந்துரையாடல் ஒன்று வவுனியா F.M.E ஊடகக்கல்லூரியில் இன்று  இடம்பெற்றது.

பட்டதாரிகள் சங்கத்தின் தலைவர் ந.வினோதன் தலைமையில் இடம்பெற்ற குறித்த கலந்துரையாடலில், வேலையற்ற பட்டதாரிகள் சந்திக்கும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக ஆரயப்பட்டது.

அத்துடன், எதிர்வரும் மாதமளவில் புதிய ஜனாதிபதி கோட்டாபய ராயபக்சவை சந்தித்து தமது வேலைவாய்ப்பு தொடர்பாக கலந்துரையாடுவதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.

குறித்த கலந்துரையாடலில் 50 இற்கும் மேற்பட்ட பட்டதாரிகள் கலந்து கொண்டிருந்தனர்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435