தனியார்துறை ஊழியர்களுக்கு தொழில் திணைக்களத்தின் விசேட அறிவித்தல்

கொரோனா இரண்டாம் அலை பரவலின் காரணமாக தனியார் துறை ஊழியர்களிடமிருந்து கிடைக்கும் முறைப்பாடுகளுக்கு உடனடியாக தீர்வுகளைப் பெற்றுக்கொடுப்பதற்கு விசேட வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதாக தொழில் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மாவட்ட செயலக காரியாலய மட்டத்தில் இந்த முறைப்பாடுகள் விசாரிக்கப்படுவதாக தொழில் ஆணையாளர் நாயகம் பிரபாத் சந்ரகீர்த்தி தெரிவித்துள்ளார்.

கிடைக்கப்பெற்றுள்ள முறைப்பாடுகளில், வேதன வழங்கல் தொடர்பில ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் தொடர்பில் அதிக முறைப்பாடுகள் உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

வேதன வழங்கல் தொடர்பில் தனியார்துறை தொழில் வழங்குநர்களுக்கு விசேட ஆலோசனைக் கோவை வெளியிடப்பட்டுள்ளதாக தொழில் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435