தனியார் துறை ஓய்வு பெறும் வயதெல்லையை அதிகரிக்க நடவடிக்கை

தனியார்துறையில் பணியாற்றும் ஊழியர்களுடைய ஓய்வூதிய வயது எல்லையை 55 லிருந்து 60 வயதாக அதிகரிப்பதற்கான அமைச்சரவை அனுமதியை பெறுவதற்கான பத்திரம் தயார்படுத்தப்படுவதாக தொழில் மற்றும் தொழிற்சங்க உறவுகள் மற்றும் சப்ரகமுவ அபிவிருத்தி அமைச்சர் டப்ளியு. டி.ஜே. செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

குறித்த அமைச்சரவைப் பத்திரம் இவ்வாரத்துக்குள் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் என்று தெரிவித்துள்ள அமைச்சர் பல தொழிற்சங்கங்களின் கோரிக்கைக்கமைய இந்நடவடிக்கை மேற்கொண்டதாகவும் சுட்டிக்காட்டினார்.

இது தொடர்பில் விரைவில் நடைபெறவுள்ள தேசிய தொழிலாளர் ஆலோசனை குழுக்கூட்டத்தில் விரிவாக ஆராய்ந்து தயாரிக்கப்படும் அறிக்கையினையும் அமைச்சரவையில் சமர்க்கவுள்ளோம்.

பல நிறுவனங்களில், ஆண்டுதோறும் சேவைக்கால நீடிப்பு அல்லது கூட்டு ஒப்பந்த அடிப்படையில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதனால் தொழிலாளருக்கு கிடைக்கும் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் பாதிக்கப்படுவதாக தொழிலாளர் விசனம் தெரிவிக்கின்றனர். இதனைக் கருத்திற்கொண்டு அரசு, ஊழியர்கள மற்றும் சேவை என்பனவற்றை இணைத்து தேசிய ஆலோசனை சபையில் குறித்த விடயம் தொடர்பில் கலந்துரையாடி அறிக்கையினை அமைச்சரவையில் சமர்ப்பிக்கவுள்ளோம் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435