தனியார் பஸ் ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு

குளியாப்பிட்டி – கொழும்பு தனியார் பஸ் ஊழியர்கள் இன்று (25) காலை முதல் பணிப் புறக்கணிப்பை போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

பஸ் சாரதி மீது பொது மக்கள் தாக்குதல் நடத்தியமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தோ இப்பணிப்புறக்கணிப்பு மேற்கொள்ளப்படுகிறது.

கடந்த 23ம் திகதி மாரவில – தப்போவ பிரதேசத்தில், தனியார் பஸ்ஸொன்று முச்சக்கரவண்டியின் மீது மோதி விபத்துக்குள்ளானதில் ஒரு பெண் பலியானதுடன் மூவர் காயமடைந்தனர். இதனால் கோபமடைந்த மக்கள் சாரதியை தாக்கியுள்ளனர். இத்தாக்குதலை கண்டிக்கும் வகையில் குளியாப்பிட்டி- கொழும்பு தனியார் பஸ் ஊழியர்கள் இவ்வாறு பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435