கைவிரல் பதிவு பிரச்சினைக்கு தீர்வு

ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் கடந்த 10 நாட்களாக முன்னெடுக்கப்பட்டு வந்த தாதியர்களின் சேவை புறக்கணிப்பு நேற்றுடன் (12) முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.

வைத்தியசாலை அதிகாரிகள் மற்றும் தொழிற்சங்க உறுப்பினர்களிடையே இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட இணக்கப்பாட்டையடுத்து, சேவைபுறக்கணிப்பு முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.

ஸ்ரீ ஜயவரதனபுர வைத்தியசாலையில் நாளாந்தம் பணிக்கு வருகை தரும் நேரம் மற்றும் பணியை நிறைவுசெய்து திரும்பும் நேரம் என்பனவற்றை பதிவுசெய்வதற்கு கைவிரல் அடையாள பதிவு இயந்திரம் பயன்படுத்தப்படுத்துவதற்கு எதிராக தாதியர்கள் சேவை புறக்கணிப்பை முன்னெடுத்தனர்.

கைவிரல் அடையாள பதிவுமுறை அரசாங்கத்தால் அறிமுகம் செய்யப்பட்டிருப்பதால் அதனை நிறுத்துவதற்கு தமக்கு அதிகாரம் இல்லை என்று வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த நிலையில், வைத்தியசாலை அதிகாரிகள் மற்றும் தொழிற்சங்க உறுப்பினர்களிடையே இடம்பெற்ற சந்திப்பில், கைவிரல் பதிவில் இருக்கின்ற பிரச்சினையை தீர்க்கும் வரை சாதாரண முறையில் கையொப்பமிடுவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன் நடைமுறை பிரச்சினை சம்பந்தமாக அமைச்சின் அதிகாரிகளுடன் பேசுவதற்கும் இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எழுத்துமூலம் இது சம்பந்தமாக உறுதி வழங்கப்பட்டுள்ளதையடுத்து சேவைபுறக்கணிப்பு முடிவுக்கு வந்துள்ளது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435