தாதியர் மதிப்பீட்டுப் பரீட்சை பிற்போடப்பட்டது!

நாட்டில் ஏற்பட்டுள்ள அனர்த்த நிலைமை காரணமாக எதிர்வரும் ஜூன் மாதம் நான்காம் திகதியும் 11ம் திகதியும் நடத்தப்படவிருந்த போட்டிப்பரீட்சை பிற்போடப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

தாதியர் சேவை தரம் ஒன்று மதிப்பீட்டு பரீட்சை மற்றும் தாதியர் மேற்படிப்பு பயிற்சியில் இணைத்துக்கொள்வதற்கான போட்டிப் பரீட்சைகளே பிற்போடப்பட்டுள்ளன.

தாதியர் தரம் ஒன்றுக்கான மதிப்பீட்டுப் பரீட்சை எதிர்வரும் 18ம் திகதி நடத்தப்படும் என்றும் ஜூலை 2ம் திகதி மேலதிக அடிப்படை தாதியர் பயிற்சிக்கான போட்டிப்பரீட்சை நடத்தப்படும் என்றும் சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435