தீர்வில்லையேல் தொழிற்சங்க நடவடிக்கை- தாதியர் சங்கம் எச்சரிக்கை

தாதியர் சேவையில் உள்ளவர்களுடைய பிரச்சினைகளுக்கு எதிர்வரும் 48 மணி ​நேரத்தில் தீர்வு பெற்றுத்தர தவறும் பட்சத்தில் தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என்று அரச சேவை ஐக்கிய தாதியர் சங்கத்தின் தலைவர் முருத்தெட்டுவே ஆனந்த தேரர் எச்சரித்துள்ளார்.

தாதியர்கள் எதிர்நோக்கும் தங்குமிடம், உணவு மற்றும் போக்குவரத்து உட்பட பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்க அரசாங்கம் முன்வரவேண்டும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

குறித்த விடயம் தொடர்பில் தேரர் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சிக்கு கடிதம் மூலம் தெரியப்படுத்தியுள்ளார்.

கொவிட் 19 பிரச்சினை காரணமாக தாதியர்கள் கடுமையான பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து வருவதனால் மேலே குறிப்பிடப்பட்டுள்ள 3 பிரச்சினைகளுக்கு உடனடியாக தீர்வை வழங்குவது அவசியம் என்று தேரர் தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435