துணை வைத்தியசேவை ஊழியர் 48 மணி நேர பணிப்பகிஷ்கரிப்பு!

பொது சுகாதார அதிகாரிகள் உட்பட துணை வைத்திய சேவையில் ஈடுபடும் 8 தரங்களைச் சேர்ந்த ஊழியர்கள் 48 மணிநேர பணிப்பகிஷ்கரிப்பை இன்று (16) ஆரம்பிக்கப் போவதாக அறிவித்துள்ளனர்.

மருந்தக ஊழியர்களை துணை மருத்துவ சேவைக்குள் உள்வாங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்தே இப்பணிப்பகிஷ்கரிப்பு மேற்கொள்ளப்படுவதாக துணை வைத்தியசேவை ஊழியர்கள் சங்கத்தின் ஊடகச் செயலாளர் நஜித் சுமனசேன தெரிவித்துள்ளார்.

இதனால், மலேரியா தடுப்புத் திட்டம், யானைக்கால் நோய் தடுப்புத் திட்டம், இலங்கை கண் மருத்துவமனை, இருதய சிகிச்சை பிரிவு, பாடசாலை பல் சுகாதார சிகிச்சை பிரிவு மற்றும் புற்றுநோய்க்கான தரவு தொழில்நுட்ப செயற்பிரிவு என்பவற்றின் பணிகளுக்கு தடையேற்படக்கூடும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435