துறைமுக தொழிற்சங்க தலைவர்கள் போராட்டம்

கொழும்பு துறைமுகத்தில் பொருத்தப்பட்டுள்ள 187 அடி உயரமான பழுதூக்கி மீதேறி, துறைமுக தொழிற்சங்க தலைவர்கள் மூன்று பேர் ​நேற்று (02) போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தில் பொருத்துவதற்காக சீனாவிலிருந்து கொண்டுவரப்பட்ட 3 பழுதூக்கிகளையும், அங்கு உடனடியாக பொறுத்துமாறு கோரியே அவர்கள் இவ்வாறான போராட்டத்தை மேற்கொண்டுள்ளனர்.

குறித்த மூன்று பழுதூக்கிகளும், துறைமுக அதிகார சபையின் நிதியில், 25.7 மில்லியன் டொலர் செலவில் கொண்டுவரப்பட்டுள்ளன.

இந்த நிலையில், தங்களது கோரிக்கைக்கு தீர்வு கிடைக்காவிட்டால், தொடர் உணவுதவிர்ப்பு போராட்டமாக இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படும் என கொழும்பு துறைமுகத்தின் வணிக கைத்தொழில் மற்றும் சேவை மேம்பாட்டு ஊழியர் சங்கத்தின் பிரதான செயலாளர் சியாமல் சுமனரத்ன தெரிவித்தார்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435