​கடமையின் போது உயிரிழந்த துறைமுக ஊழியர்

கொழும்பு துறைமுகத்தில் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது இடம்பெற்ற விபத்தில் ஊழியர் ஒருவர் பலியாகியுள்ளார்.

துறைமுகத்தில் கிழக்கு பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கப்பலில் இருந்து பொதிகளை இறக்கிக் கொண்டிருந்தவேளை பாரந்தூக்கியின் சங்கிலி உடைந்து ஊழியர் ஒருவரின் தலையில் மொதியதில் ஏற்பட்ட கடுமையான காயமடைந்த குறித்த ஊழியர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதித்த வேளையில் உயிரிழந்துள்ளார் என பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

நேற்று (18) காலை 9.30 மணிக்கு இவ்விபத்து ஏற்பட்டுள்ளது. அல்தெனிய, கடவத்தையைச் சேர்ந்த குருளிபொத்த வாடிய கெதர பிரியந்த குணதுங்க என்ற 47 நபரே இவ்விபத்தில் உயிரிழந்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435