வடக்கு, தெற்கு அரச பேருந்து பணியாளர்கள் பணிப்புறக்கணிப்பில்

சம்பள அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களை முன்வைத்து, தென் மாகாண அரச பேருந்து பணியாளர்கள் கடந்த நான்கு தினங்களாக போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், நேற்றைய தினம் அவர்கள் இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் ரமால் சிறிவர்தனவுடன் பேச்சுவார்த்தை நடத்தி இருந்தனர். எனினும் இந்த பேச்சுவார்த்தையில் இணக்கப்பாடு எட்டப்படவில்லை.

இதையடுத்து, இன்றைய தினம் போக்குவரத்து அமைச்சருடன் நிமல் சிறிபால டி சில்வாவுடன் பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளது.

இந்தப் பேச்சுவார்த்தையில் இணக்கப்பாடு ஏற்படாதபட்சத்தில் தொடர்ந்தும் போராட்டத்தை முன்னெடுக்கவிருப்பதாக, தென் மாகாண அரச பேருந்து சேவையாளர்கள் எச்சரித்துள்ளனர்.

இதேவேளை, ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து இலங்கை போக்குவரத்து சபையின் வட மாகாண சபை ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த பணிப்புறக்கணிப்பு போராட்டம் சப்ரகமுவ, தென் மாகாணங்களிலும் கண்டி மாவட்டத்திலும் முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பிரச்சினை தொடர்பில் போக்குவரத்து அமைச்சர் மற்றும் அமைச்சின் அதிகாரிகளுடன் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாக அகில இலங்கை போக்குவரத்து சங்கம் தெரிவித்துள்ளது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435