தொடரும் தொழிலாளர் திணைக்கள ஊழியர் வேலைநிறுத்தம்

வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அனைத்து அரச சேவை தொழிலாளர் திணைக்கள ஊழியர்களினதும் விடுமுறை ரத்து செய்யப்பட்டுள்ளதால் இன்று (15) பணிக்கு சமூகமளிப்பது கட்டாயம் என்று அறிவித்திருந்த போதிலும் தொடர்ந்தும் அவ்வூழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.


தமது கோரிக்கை நிறைவேற்றப்படும் வரையில் தொடர்ந்தும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அரச சேவை தொழிலாளர் திணைக்கள அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இவ்வூழியர்கள் கடந்த புதன்கிழமை (07) தொடக்கம் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருவதால் பொதுமக்களின் உரிமைகள் மீறப்பட்டுள்ளதாகவும் எனவே உடனடியாக பணிக்கு சமூகமளிக்குமாறும் கூறி நேற்று (14) திணைக்கள ஆணையாளர் அறிக்கையொன்றை வெளியிட்டிருந்தார். எனினும் இதனை சங்கம் நிராகரித்துள்ளது. தமது கோரிக்கை நிறைவேறும் வரையில் போராட்டத்தை தொடரப்போவதாக சங்கத்தின் தலைவர் ஐ.சி. கமகே தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

வேலைத்தளம்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435