தொடரும் பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர் வேலைநிறுத்தம்

தொழிற்சங்க நடவடிக்கையை மேலும் கடுமையான முறையில் முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது.

கடந்த 27ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட பணிப்பகிஷ்கரிப்புக்கு சரியான முறையில் பதிலளிக்கப்படாமையினால் இத்தீர்மானம் எட்டப்பட்டுள்ளது என்று பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் சங்க ஒன்றியத்தின் தலைவர் எட்வட் மல்வத்தகே தெரிவித்துள்ளார்.

இப்பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக அனைத்து பல்கலைக்கழகங்களினதும் கல்வி நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மேலும் கடுமையான தொழிற்சங்க நடவடிக்கை எடுக்கப்படுமாயின் மாணவர்களின் கல்வி நிலை கடுமையாக பாதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

வேலைத்தளம்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435