தொடரூந்து தொழிற்சங்க நடவடிக்கை பிற்போடப்பட்டது!

தொடருந்து தொழிற்சங்கத்தினர் இன்று நள்ளிரவு முதல் முன்னெடுக்கத் திட்டமிட்டிருந்த பணிப்புறக்கணிப்பு போராட்டம் இன்று பிற்பகல் 2.00 மணிவரை பிற்போடப்பட்டுள்ளது.

நிதி அமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு சந்தர்ப்பம் ஏற்படுத்தித் தருவதாக வழங்கப்பட்ட உறுதி மொழியயை அடுத்து, இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தொடருந்து தொழிற்சங்கம் அறிவித்துள்ளது.

வேதன முரண்பாடு பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக அமைச்சரவை கிடைத்துள்ள போதும், அதனை நிதியமைச்சு நடைமுறைப்படுத்தாமைக்கு எதிராக பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுக்கத் திட்டமிடப்பட்டிருந்தது.

தொடருந்து சாரதிகள், கட்டுப்பாட்டாளர்கள் மற்றும் நிலைய அதிபர்கள் உள்ளிட்ட தொழிற்சங்கள் நேற்று நள்ளிரவு முதல் இரண்டு நாட்களுக்கு அடையாள பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுக்க இருந்தனர்.

இந்த நிலையில், குறித்த போராட்டத்தை இன்று பிற்பகல் 2.00 மணிவரை பிற்போட்டுள்ளதாக, கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் தொடருந்து இயந்திர சாரதிகள் சங்கத்தின் செயலாளர் இந்திக்க தொடங்கொட தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில்  தொடருந்து தொழிற்சங்கம் மற்றும் நிதி அமைச்சர் ஆகியத்தரப்புகளுக்கு இடையிலான தீர்மானம்மிக்க கலந்துரையாடல் ஒன்று இன்று நடைபெறவுள்ளது.
நிதி அமைச்சில் நடைபெறவுள்ள இந்த கலந்துரையாடலில் போக்குவரத்து அமைச்சரும் கலந்து கொள்ளவுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இன்றைய கலந்துரையாடலில் சாதகமான தீர்வு காணப்படாவிட்டால், திட்டமிட்டபடி போராட்டம் நடத்தப்படும் என்று தொடருந்து பணியாளர்களின் தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435