பெண் ஊழியர் மீது தாக்குதல்: பொறியியலாளருக்கு பிணை

மேல் மாகாண வீதி அபிவிருத்தி அதிகார சபையின் உடுகம்பொல அலுவலகத்தின் பெண் ஊழியர் ஒருவரை தாக்கியமை தொடர்பில் கைதுசெய்யப்பட்ட தலைமை பொறியியலாளர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

குறித்த நபர் இன்று கம்பஹா நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

இதன்போது அவரை 2 இலட்சம் ரூபா பெறுமதியான சரீரப்பிணையில் விடுதலை செய்ய நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

குறித்த நபர் இன்று (25) முற்பகல் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

அலுவலக பெண் ஊழியர் ஒருவரை அவர் தாக்க காணொளி சமூக வலைத்தளங்களில் நேற்று (24) வைரலாக பரவியது.

இந்த தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய தலைமை பொறியியலாளரை பணி நீக்கம் செய்துள்ளதாக மேல் மாகாண வீதி அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் உபாலி கொடிகார குறிப்பிட்டார்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435