தொண்டர் ஆசிரியர்களுக்கு நியமனம் வழங்கும் நிகழ்வு இன்று

வடக்கு கிழக்கு தொண்டர் ஆசிரியர்களுக்கான நிரந்தர நியமனம் வழங்கும் நிகழ்வு இன்று (27) இந்து கலாசார மண்டபத்தில் பிற்பகல் 2.30 மணிக்கு இடம்பெறவுள்ளது.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெறும் இந்நிகழ்வில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொண்டர் ஆசிரியர்களுக்கு நிரந்தர நியமனங்கள் வழங்கப்படவுள்ளன.

அசாதாரண சூழ்நிலை நிலவிய காலப்பகுதியில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள பாடசாலைகளில் தொண்டர் ஆசிரியர்களாக சேவைகளை வழங்கியவர்கள் நிரந்தர நியமனம் கோரி நீண்டநாட்களாக போராடி வந்த நிலையில், நேர்முகத்தேர்வு நடத்தப்பட்டு தெரிவு செய்யப்பட்டவர்களுக்​கே இந்நியமனங்கள் வழங்கப்படவுள்ளன.

இதேவேளை, நிரந்தர நியமனத்திற்கு தெரிவு செய்யப்படாதவர்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருவதும் இந்நியமனம் வழங்கப்படுவதற்கு ஆசிரியர் சங்கம் எதிர்ப்புத் தெரிவித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435