தொல்லியல் திணைக்கள அலுவலர் வெற்றிடங்களை நிரப்ப நடவடிக்கை

தொல்லியல் திணைக்களத்தின் சிரேஷ்ட அலுவலர் வெற்றிடங்களை நிரப்புவதற்கு துரிதமாக நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி உரிய தரப்பினருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

தொல்லியல் மையங்கள் மற்றும் தொல்லியல் பொருட்களை பாதுகாப்பது தொடர்பில் ஜனாதிபதி செயலகத்தில் கடந்த 24ம் திகதி இடம்பெற்ற விசேட கலந்தரையாடலில் ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.

தொல்லியல் மையங்களின் பாதுகாப்பு மற்றும் தொல்லியல் செயற்பாடுகள் தொடர்பிலுள்ள தடைகளை நீக்கி, அவற்றை முறைமைப்படுத்துவதற்கு விரைவாக நடவடிக்கை எடுத்தல் அவசியம் என்றும் இதன் போது ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

தொல்லியல் துறையுடன் தொடர்புடைய அலுவலர்களும் பௌத்த துறவிகளும் கலந்துரையாடலில் பங்குபற்றினார்கள்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435