வாய்ப்பு வழங்காவிட்டால் தொடர்ச்சியாக போராட்டம்- வேலையற்ற பட்டதாரிகள்

வேலையற்ற பட்டதாரிகளுக்கு தொழில்வாய்ப்பினை வழங்காவிடின் தொடர்ச்சியான போராட்டங்களை மேற்கொள்ளவுள்ளதாக ஒன்றிணைந்த பட்டதாரிகள் சங்கத்தின் தலைவர் தென்நே ஞானானந்த தேரர் தெரிவித்துள்ளார்.

வேலையற்ற பட்டதாரிகள் சங்கம் ஏற்பாடு செய்திருந்த கிழக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகளின் ஒன்றுகூடலில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பை வழங்குவதில் உள்வாரி வௌிவாரி என்று பிரித்து பாகுபாட்டை உருவாக்கி மீண்டும் எம்மை அரசாங்கம் வீதியில் இறங்க தூண்டியுள்ளது. அரசாங்கத்தின் இச்செயற்பாட்டை நாம் வன்மையாக கண்டிக்கிறோம். ஐதேக அரசாங்கம் உள்வாரி, வௌிவாரி என்று பிரித்து பட்டதாரிகளுக்கு துரோகம் இழைத்துள்ளது.

பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்கி 14 நாட்களில் வௌிவாரி பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்குவதாக தமிழ் அரசியல்வாதிகள் உறுதிமொழி வழங்கினாலும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. தீர்மானமும் இல்லை. வெறுமனே திகதிகளை வழங்கி பட்டதாரிகளை ஏமாற்றி வருகிறது. தமிழ் அரசியல்வாதிகள் பட்டதாரிகளை நகைச்சுவை பொருளாக பார்க்காமல் நியமனங்களை வழங்குவதற்கான ஒழுங்குகளை மேற்கொண்டு செயற்படவேண்டும் என்பதே எமது கோரிக்கை என்றும் ஞானானந்த தேரர் தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435