தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கான விண்ணப்பம் கோரல்

தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களை பூர்த்தி செய்வதற்கான திறந்த போட்டிப்பரீட்சைக்கான விண்ணப்பங்கள் பட்டதாரிகளிடமிருந்து கோரப்பட்டுள்ளன.

தொழிற்கல்வி பாடநெறிகளுக்காக ஆசிரியர் சேவை தரம் 3 – 1 இற்கு தமிழ் மற்றும் சிங்கள மொழி மூலம் பட்டதாரிகளை இணைத்துக்கொள்வதற்கே விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

இன்றைய தினம் (10) வௌியான வர்த்தமானியில் மேலதிக விபரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. அதில் காணப்படும் மாதிரி விண்ணப்படிவத்திற்கேற்ப தயாரிக்கப்பட்ட விண்ணப்பங்களை எதிர்வரும் டிசம்பர் மாதம் 11ம் திகதிக்கு முன்னர் பரீட்சை ஆணையாளர் நாயகம், ஏற்பாடு மற்றும் வௌிநாட்டு பரீட்சை பிரிவு, இலங்கை பரீட்சைத் திணைக்களம், த.பெ இலக்கம் 1503, கொழும்பு என்று முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு கோரப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435