தொழிற்சங்க நடவடிக்கையை கைவிட பொது சுகாதார பரிசோதகர்கள் தீர்மானம்

பொது சுகாதார பரிசோதகர்கள் முன்னெடுத்துள்ள தொழிற்சங்க நடவடிக்கையை நாளை காலை 7.30 மணியுடன் முடிவுக்கு கொண்டுவர தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் இன்று நடத்திய சந்திப்ப்பில் ஏற்பட்ட இணக்கப்பாட்டை அடுத்து. இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர் சங்கத்தின் தலைவர் உப்புல் ரோஹண தெரிவித்துள்ளார்.

பொது சுகாதார பரிசோதகர்கள், நாடு முழுவதும் கடந்த 16 ஆம் திகதி முதல் கொரோனா தடுப்பு கடமையிலும், தொற்று நோய் கட்டுப்பாட்டு கடமையில் இருந்தும் விலகி தொழிற்சங்க நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர்.

நோய்த்தடுப்பு மற்றும் தனிமைப்படுத்தல் கட்டளை சட்ட ஒழுங்கு விதிகள் தொடர்பில் சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானியில் தங்களுக்கு அதிகாரம் பகிர்ந்தளிக்கப்படவில்லை என அறிவித்து பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தால் பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டது.

இந்த நிலையில், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன்  இன்று முற்பகல் விசேட கலந்துரையாடல் இடம்பெற்றது.

நோய்த்தடுப்பு மற்றும் தனிமைப்படுத்தல் கட்டளை சட்ட ஒழுங்கு விதிகள் தொடர்பில் பொது சுகாதார பரிசோதகர்களுக்கும் அதிகாரத்தைப் பகிர்ந்தளிப்பது குறித்து இன்றைய கலந்துரையாடலில் இணக்கப்பாடு எட்டப்பட்டதாக அகில இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன கூறினார்.

அதற்கமைய, தங்களின் பணிப்பகிஷ்கரிப்பைக் கைவிடத் தீர்மானித்ததாக அவர் குறிப்பிட்டார்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435