தொழிலாளருக்கு சம்பள உயர்வு கோரும் தமிழக மக்கள்!

தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் 730 ரூபா என்று தீர்மானித்து கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திட்டுள்ள நிலையில் தற்போது தொழிலாளருக்கு ஆயிரம் ரூபா சம்பள உயர் வழங்க வலியுறுத்தி போராட வருமாறு சீமான் தமிழக மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

இந்திய அரசியல் கட்சியான ‘நாம் தமிழர் கட்சி’ இக்கோரிக்கை ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்துள்ளது.

எதிர்வரும் 26ஆம் திகதி லயோலா கல்லூரிக்கு முன்பாக இவ்வார்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.

இதேவேளை,  தோட்டத் தொழிலாளருக்கு ஆயிரம் ரூபா சம்பளம் வழங்க வலியுறுத்தில் லண்டன் வாழ் புலம் பெயர் தொழிலாளரும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர்.

மலையக தோட்டத் தொழிலாளர் சமூகம் ஒட்டு மொத்தமாக புறந்தள்ளப்பட்டுள்ளதாக அண்மையில இலங்கைக்கு விஜயம் செய்திருந்த  சிறுபான்மை உரிமைக்கான ஐநா பிரதிநிதி ரீட்டா ஐசக் நாடியா சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

வேலைத்தளம்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435