தொழில்நுட்ப கல்லூரிகளுக்கு வளவாளர்களை பதிவு செய்தல் 2020

தொழில்நுட்ப கல்லூரி மற்றும் பயிற்சித் திணைக்களத்திற்கு வளவாளர்களை பதிவு செய்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

குறித்த அமைச்சின் கீழுள்ள தொழில்நுட்ப கல்லூரிகள் மற்றும் பயிற்சிக் கல்லூரிகளில் வௌிவாரி அடிப்படையில் விரிவுரையாளர்கள் 2020ம் ஆண்டுக்கு பதிவு செய்யப்படவுள்ளனர்.

விரிவுரைகளை மேற்கொள்வுள்ள பாடங்கள் பற்றிய விபரங்கள் மற்றும் விண்ணப்பப்படிவம் என்பவற்றை தாம் கடமையாற்ற விரும்பும் கல்லூரிப் பணிப்பாளர் அல்லது அதிபரிடமிருந்த பெற்றுக்கொள்ள முடியும். அல்லது கல்லூரிகளுக்கு நேரடியாக சென்று அவசிமான விபரங்களை பெற்றுக்கொள்ள முடியும்.

அல்லது நீங்கள் வௌிவாரி அடிப்படையில் விரிவுரைகள் நடத்தப்படவுள்ள பாட விபரங்கள் மற்றும் விண்ணப்பங்கள் குறித்த கல்லூரிகளின் பணிப்பாளர்கள் மற்றும் அதிபர்களுக்கு சுய முகவரியிடப்பட்டு, முத்திரையிடப்பட்ட 9″ ஓ 4″ அளவு கடித உரையை அனுப்புவதனூடாக தபால் மூலம் பெற்றுக்கொள்ள முடியும். குறித்த கடித உரையின் இடது பக்க மேல்மூலையில் வௌிவாரி வளவாளர் என்று குறிப்பிடவும்.

குறித்த கடித உரையை அனுப்புவதற்கான இறுதித் திகதி 22.11.2019 ஆகும். விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வதற்கான இறுதித் திகதி 02.12.2019 ஆகும்.

வர்த்தமானியை வாசிக்க

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435