தொழில்முறை பாடத்திட்டத்திற்கு விண்ணப்பிக்க நாளை இறுதி வாய்ப்பு

13 வருட உத்தரவாத கல்வித் திட்டத்தின் கீழ் உயர்தர தொழில்முறை பாடத்திட்டத்தை கற்பதற்காக தரம் 12 இல் மாணவர்களை இணைத்துக்கொள்வதற்காக விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்வதற்காக நீடிக்கப்பட்ட இறுதி திகதி நாளையுடன் (ஜூலை 20) நிறைவடையவுள்ளது.

இதற்கான விண்ணப்பங்கள் மற்றும் தொழில்முறை பாடத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும் பாடசாலை அட்டவணை அமைச்சின் www.mov.gov.lk  என்ற இணையதளம் மூலமாக பெற்றுக்கொள்ள முடியும்.

மேலதிக விபரங்களுக்காக கல்வி அமைச்சின் அனைவருக்கும் கல்விக் கிளையின் 0112 787136 என்ற தொலைபேசி எண்ணுடன் தொடர்பு கொண்டு வினவலாம் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

அத்துடன், அந்தந்த மாகாணங்களின் தொழில்முறைக் கல்வியுடன் கூடிய பாடசாலைகளில் நிலவும் தொழில்முறை பாடங்கள் தொடர்பான மேலதிக தகவல்கள் பின்வரும் தொலைபேசி எண்கள் ஊடாக மாகாண ஒருங்கிணைப்பு உத்தியோகத்தர்களை தொடர்பு கொண்டு பெற்றுக்கொள்ளும் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

தென் மாகாணம் – சமில் கணேகொட (உதவிக் கல்விப் பணிப்பாளர்) – (091 2233164 / 070 3017401)

மத்திய மாகணம் – ஏ. அபேவிக்ரம (பிரதி; கல்விப் பணிப்பாளர்) 081 2224041 / 071 9783574

வடமத்திய மாகாணம்- திருமதி ஈ.எம்.பீ.எஸ். ஏக்கநாயக்க (பிரதி கல்விப் பணிப்பாளர்) 025 2225222 / 0718077583

சப்ரகமுவ மாகாணம் – திருமதி மாத்தர ஆரட்சி (பிரதி; கல்விப் பணிப்பாளர்) 045 2222403 / 071 8027590

மேல் மாகாணம் – பிரபாத் வித்தானகே (பிரதி கல்விப் பணிப்பாளர்) 011 2883470 / 0718617295

கிழக்கு மாகாணம் – எஸ்;. ஷாகிட்  (உதவிக் கல்விப் பணிப்பாளர) 026 2222110 / 076 4936661

வடமேல் மாகாணம் – யூ.ஜீ. உயங்கொட (பிரதி; கல்விப் பணிப்பாளர்) 037 2221362 / 0718197307

கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சைக்கு தோற்றிய எந்தவொரு மாணவருக்கும் இதற்காக விண்ணப்பிக்கும் சந்தர்ப்பங்கள ஏற்படுத்தியிருப்பதுடன்,  தொழில்முறை பாடத்திட்டத்தின் கீழ் அறிமுகப்படுத்தப்பட்ட 26 தொழில்முறைப் பாடங்களில் தாம் அதிகம் விரும்பும் தொழில்முறை பாடத்துறை ஒன்றை தெரிவுசெய்வதற்கும் இதன் கீழ் சந்தர்ப்பம் கிட்டும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

நாட்டின் சகல கல்வி வலயங்களும் பிரதிநிதித்துவம் படுத்தும் வகையில் 311 பாடசாலைகள் ஏலவே உயர்தர தொழில்முறை பாடத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதோடு இந்த வருடம் முதல் சகல கல்வி கோட்டங்களும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் மேலும் 112 பாடசாலைகளில் தொழில்முறை பாடத்திட்டம் ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்த தொழில்முறை பாடத்திட்டத்தை பயிலும் மாணவர்கள் தாம் தெரிவு செய்யும் தொழிற் பாடத்துறை தொடர்பாக பாடசாலையில் அறிமுகப்படுத்தப்படும் பாடநெறி, தொழிற் பயிற்சி நிறுவனத்தில் கோட்பாட்டு ரீதியிலான அறிவு மற்றும் பிரயோக பயிற்சி மற்றும் தொழில் நிலையம் ஒன்றுடன் இணைத்து வழங்கப்படும் தொழில்முறைப் பயிற்சியும் கல்வி பயிலும் காலத்தில் வழங்கப்படும்

தேசிய தொழிற் பயிற்சி திறன் 4 ஆம் மட்ட (Nஏஞ டுநஎநட 4) சான்றிதழ தொழில்முறை பாடநெறியில் சகல உயர்தர மாணவருக்கும் உரித்தாகும். அத்துடன் தொழிற் பயிற்சிக்குத் தோன்றும் காலத்தில் மாணவர்களின் தினசரி வருகையின் அடிப்படையில் நாள் ஒன்றுக்கு ரூபா 500 கொடுப்பனவும் உரித்தாகும் என கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435