தொழில் திணைக்கள அதிகாரிகள் மீண்டும் வேலைநிறுத்தம்?

தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த அரச தொழில் அதிகாரிகள் வேலைநிறுத்தப் போராட்டம் நாளை (19) தொடக்கம் மீண்டும் ஆரம்பிக்க எதிர்பார்த்துள்ளதாக அரச பொது தொழிலாளர் சங்க அதிகரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

தமதுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகள் இதுவரை வழங்க உரிய தரப்பினர் தவறியுள்ளமையினால் மீண்டும் வேலைநிறுத்தம் ஆரம்பிக்கப்படவுள்ளது என்று அச்சங்கத்தின் தலைவர் ஐ.சி.கமகே தெரிவித்தார்.

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கடந்த செப்டெம்பர் மாதம் 4 ஆம் திகதி போராட்டத்தை ஆரம்பித்த அரச தொழில் அதிகாரிகள் தொடர்ச்சியாக செப்டெம்பர் 27ஆம் திகதி வரை வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435