தோட்ட ஊழியர் சம்பள அதிகரிப்புக்கு கூட்டு உடன்படிக்கை

தோட்ட ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்கும் கூட்டு உடன்படிக்கையில் இலங்கை முதலாளிமார் சம்மேளனம் கையெழுத்திட்டுள்ளது.

ராஜகிரியவில் உள்ள இலங்கை முதலாளிமார் சம்மேளனத்தின் தலைமையகத்தில் உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டதாக இலங்கை தோட்ட ஊழியர்கள் சங்கம் தெரிவித்துள்ளார்.

இலங்கை தோட்ட ஊழியர் சங்கம் மற்றும் தோட்ட நிறுவனங்களை பிரதிநிதிகள் உடன்படிக்கையில் கையெழுத்திட்டுள்ளனர்.

இந்த உடன்படிக்கை மார்ச் மாதம் முதலாம் திகதியில் இருந்து அமுல்படுத்தப்பட உள்ளதுடன் தோட்ட ஊழியர்களின் சம்பளம் 25 வீதத்தில் அதிகரிக்கப்பட உள்ளது.

தோட்ட ஊழியர்கள் எதிர்நோக்கும் பல கோரிக்கைகள் இந்த உடன்படிக்கையின் மூலம் வென்றெடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை தோட்ட ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் நாத் அமரசிங்க தெரிவித்துள்ளார்.

நன்றி- தமிழ் வின்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435