நாடு திரும்பும் புலம்பெயர் இலங்கையருக்கு விசேட சலுகை

வௌிநாடுகளில் பணியாற்று மீண்டும் தாயகம் திரும்பும் புலம்பெயர் தொழிலாளர்கள் கொண்டு வரும் 9 பொருட்களுக்கான சுங்கத் தீர்வைகளை முற்றாக நீக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

குறைந்தது ஒரு ஆண்டு காலம் வெளிநாடுகளில் பணியாற்றிய விட்டு நாடு திரும்பும் புலம்பெயர் தொழிலாளர்களின் நலன்களைக் கவனத்தில் கொண்டே இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது என்று சுங்கத் திணைக்கள பிரதி பணிப்பாளர் பராக்கிரம பஸ்நாயக்க தொலைக்காட்சி செவ்வியொன்றில் தெரிவித்துள்ளார்.

வெளிநாடுகளில் பணியாற்றி விட்டுத் திரும்பும் தொழிலாளர்களுக்கு கூடுதல் நன்மைகளை அளிக்கும் நோக்கில் இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

குளியலறை கருவிகளின் தொகுதி ஒன்று, படுக்கையறைத் தொகுதி ஒன்று, 3500 சிசி திறனுக்குக் குறைவான உந்துருளி ஒன்று, ஆகியவற்றையும் வெளிநாடுகளில் இருந்து திரும்பும் தொழிலாளர்கள் தீர்வையின்றி எடுத்து வர முடியும்.

அத்துடன், சூரிய கலன்கள், கணினிகள், மடிக்கணினிகள், இரண்டு கைபேசிகள் ஆகியவற்றையும் தீர்வையின்றி எடுத்து வர முடியும் என்பதுடன், 55 அங்குலத்துக்கு உட்பட்ட தொலைக்காட்சிகளையும் தீர்வையின்றி கொள்வனவு செய்ய முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

நன்றி- தினகரன்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435