நாட்டில் மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 3274

மினுவாங்கொடை ப்ரெண்டிக்ஸ் ஆடைத் தொழிற்சாலை கொத்தணியில், நேற்று (07) வரையில் கொரோனா தொற்று உறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை ஆயிரத்து 34 ஆக அதிகரித்துள்ளது.

நேற்று 202 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. முன்னதாக 832 பேருக்கு தொற்று உறுதியாகியிருந்த நிலையில், மொத்த எண்ணிக்கை 1034 ஆக அதிகரித்துள்ளது.

இதற்கமைய, நாட்டில் இதுவரையில் கொவிட்-19 தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 4459 ஆக அதிகரித்துள்ளது.

வைத்தியசாலைகளில் சிகிச்சைப்பெறுபவர்களின் எண்ணிக்கை 1172 ஆக அதிகரித்துள்ளது.

கொவிட்-19 தொற்றிலிருந்து நேற்று 8 பேர் குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர்.

இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 3274 ஆக அதிகரித்துள்ளது.

 

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435