நியமனங்கள் கிடைக்கும் வரை வாக்களிக்கப்போவதில்லை

நேற்றுடன் (17) ஐம்பதாவது நாள் சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அம்பாறை மாவட்டப் பட்டதாரிகள் தமக்கு அரச நியமனங்கள் வழங்கும் வரையில் தேர்தலில் வாக்களிக்கப்போவதில்லை என்று சபதம் எடுத்துள்ளனர்.

ஐம்பதாவது நாள் பூர்த்தியான நேற்று காரைதீவு விபுலாநந்தா சுற்றுவட்டத்தில் மாபெரும் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர். இதன் போது கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு சபதமெடுத்துள்ளனர்.

தொழில் வழங்கும் வரை போராட்டத்தை கைவிடப்போவதில்லை என்று உறுதியாக கூறியுள்ள இப்பட்டதாரிகள், இனிவரும் எந்த தேர்தலிலும் எந்தவொரு அரசியல்வாதிகளுக்கும் வாக்களிக்கப் போவதில்லை என்றும் சத்தியப்பிரமானம் செய்துள்ளனர்.

தமது ஆர்ப்பாட்டம் தொடர்பில் அரசாங்கம் எவ்வித அக்கறையும் காட்டாமல் இருக்கின்றமை கவலைக்குரிய விடயம் என்று விசனம் தெரிவித்துள்ள பட்டதாரிகள், தமது கோரிக்கையை நிறைவேற்ற அரசாங்கம் முன்வரவேண்டும் என்றும் கோரியுள்ளனர்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435