நிறைவடைந்தது தொழில் திணைக்கள வேலைநிறுத்தம்!

கடந்த 7 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட தொழில் திணைக்கள அதிகாரிகள் சங்க வேலைநிறுத்தப் போராட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

சேவை யாப்பு தொடர்பான அமைச்சரவை பத்திரத்தை அமைச்சரவையில் சமர்ப்பிக்க தொழில் அமைச்சர் டப்ளியு. டி. ஜே. செனவிரத்னவின நடவடிக்கை எடுத்துள்ளமையினால் இத்தீர்மானம் எட்டப்பட்டதாக என்று சங்கத்தின் தலைவர் ஐ. சி. கமகே தெரிவித்தார்.

இன்று அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் அமைச்சரவை பத்திரம் தொடர்பான விவாதம் எதிர்வரும் ஒக்டோபர் நான்காம் திகதி நடைபெறவுள்ளது.

தொழில் திணைக்கள அதிகாரிகள் தமது சேவையை செயற்றிறன் மிக்கதாக உறுதிப்படுத்தல் மற்றும் தமது சேவை யாப்பை சட்டரீதியானதாக மாற்றியத்தல் உட்பட பல கோரிக்கைகளை முன்வைத்து கடந்த 7 ஆம் திகதி வேலைநிறுத்த போராட்டத்தை ஆரம்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

வேலைத்தளம்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435