நீர்வழங்கல் – நீர்முகாமைத்துவ சேவை சங்கத்தினர் நான்கு மணிநேர எதிர்ப்பு

நீர்வழங்கல் மற்றும் நீர்முகாமைத்துவ சேவை சங்கத்தினர் இன்று (30) முற்பகல் 9 மணிமுதல் பிற்பகல் 1 மணிவரை பணியிலிருந்து விலகி நான்கு மணிநேர எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட உள்ளனர்.

வேதன உயர்வு கோரிக்கையை முன்வைத்து இந்த எதிர்ப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளதாக கோரிக்கை நீர்வழங்கல் மற்றும் நீர்முகாமைத்துவ சேவை சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் உபாலி ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

வேதன உயர்வு கோரிக்கை தொடர்பில் நிர்வாகத்தினருடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்தமையே இந்த எதிர்ப்பு நடவடிக்கைக்கு காரணம் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435