நுகர்வோர் அதிகார சபை தலைவ​ரை சிறைபிடித்த ஊழியர்கள்

பணியாளர்களினால் நிபந்தனை அடிப்படையில் சிறைப்பிடித்து வைக்கப்பட்டிருந்த நுகர்வோர் சேவை அதிகார சபையின் தலைவர், பணிப்பாளர் நாயகம் உள்ளிட்ட அதிகாரிகள் நேற்றிரவு (08) விடுவிக்கப்பட்டனர்.

அதிகார சபையின் மனித வளங்கள் பிரிவின் பிரதானியை பதவிநீக்குமாறு வலியுறுத்தி நேற்று மாலை பணியாளர்களினால் குறித்த அதிகாரிகள் சிறைப்பிடிக்கப்பட்டனர்.

மனித வளங்கள் பிரிவின் பிரதானி தொடர்பில் விசாரணைகள் நடத்தப்படுவதாகவும், பதவிநீக்கம் செய்து வெளியேற்றுவதாகவும் பல்வேறு சந்தர்ப்பங்களில் அறிவிக்கப்பட்டபோதும், அது நிறைவேற்றப்படாததையடுத்தே பணியாளர்களின் குறித்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த நிலையில், அவரை நீக்குவதாக தலைவர் உள்ளிட்ட அதிகாரிகள் குழாம் வழங்கிய வாக்குறுதியை அடுத்து, நேற்றிரவு அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435