பட்டதாரிகளுக்கு கட்டம் கட்டமாக தொழில்வாய்ப்பு 

மத்திய மாகாணத்தில் தொழில்கோரும் பட்டதாரிகளின் பிரச்சினைக்கு தீர்வு பெற்றுத் தருவதாக மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க உறுதியளித்துள்ளார்.

மத்திய மாகாணத்தில் தொழில்கோரும் பட்டதாரிகள், தமக்கு தொழில்வாய்ப்புக்களை வழங்கக்கோரி நேற்றைய தினம் ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டனர்.

மத்திய மாகாண சபை வளாகத்துக்கு முன்பாக இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது மாகாண சபையின் அனைத்து வாயிற்கதவுகளையும் மூடிக்கொண்டு மாகாண சபைகளின் செயற்பாடுகளுக்கு இடையூறை ஏற்படுத்தி ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.

இதையடுத்து, அவர்களுக்கு கட்டம் கட்டமாக தொழில்வாய்ப்பை வழங்குவதாக மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க உறுதியளித்துள்ளார்.

முதலமைச்சர் உறுதியளித்த பின்னர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தொழில்கோரும் பட்டதாரிகள், ஆர்ப்பாட்டத்தைக் கைவிட்டனர்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435