பட்டதாரிகள் கவனத்திற்கு

பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படுவதாக சமூக வலைத்தளங்களில் வௌியாகும் செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லை என்று யாழ் மாவட்டச் செயலகம் வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆண்டுதோறும் பட்டதாரிகள் விபரங்களை சேகரிக்கும் நடைமுறையுள்ளது. அதற்காகவே பட்டதாரிகள் விபரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. எனினும் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் எனவே தேசிய அடையாள அட்டையுடன் மாவட்டச் செயலகத்திற்கு செல்லுமாறும் தகவல்கள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றது. இதில் எவ்வித உண்மையும் இல்லை. மாவட்டச் செயலகத்தினால் தகவல் திரட்டப்படுவதற்கும் தொழில்வாய்ப்பை வழங்குவதற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை மாவட்டச் செயலாளர் நா. வேதநாயகம் கையெழுத்துடன் வௌியிடப்பட்டுள்ள அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435