பன்விலை பெருந்தோட்டத்துறை தொழிலாளர்கள் அடையாள வேலைநிறுத்தம்

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பன்விலை பெருந்தோட்டத்துறை தொழிலாளர்கள் நேற்று (06) அடையாள வேலைநிறுத்தமொன்றை மேற்கொண்டுள்ளனர்.

பன்விலை, கபரகலை, கலாபொக்க யாக்கத்திற்கு சொந்தமான ஆயிரக்கணக்கான தோட்டத்தொழிலாளர்களே இவ்வாறு அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தோட்டங்கள் சரியான முறையில் பராமரிக்கப்படாமை, தூர இடங்களில் மக்களுக்கு வசதியற்ற பகுதிகளில் உள்ள தோட்டக்காணிகளை தொழிலாளர்களுக்கு பகிர்ந்தளிக்கின்றமை, வௌியாருக்கு காணிகள் பகிரந்தளிக்கப்படுகின்றமை, தொழிலாளர்களின் நலன்புரி தொடர்பில் கவனமின்மை, குறைந்த வேலைநாட்கள் போன்ற காரணங்களை முன்வைத்து இத்தோட்டத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்னர்.

தமது கோரிக்கைக்கு இரு வாரங்களில் தீர்வு கிடைக்காவிடின் தொடர்ச்சியான போராட்டங்கள் மேற்கொள்ளப்படும் என்றும் அத்தொழிலாளர்கள் எச்சரித்துள்ளனர்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435