பரீட்சை பணிகளுக்கான கொடுப்பனவுகளை அதிகரிக்குமாறு கோரிக்கை

பரீட்சை பணிகளுக்காக வழங்கப்படும் அனைத்துக் கொடுப்பனவுகளையும் அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு, ஆசிரியர் சேவை சங்கம் பரீட்சைகள் ஆணையாளரிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து ஆசிரியர் சேவை சங்கம் பரீட்சைகள் ஆணையாளருக்கு  கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.
வாழ்க்கைச் செலவு மற்றும் தொழில் முக்கியத்துவம் என்பன தொடர்பில் கவனம் செலுத்தி, குறித்து கொடுப்பனவுகள் உடனடியாக அதிகரிக்கப்பட வேண்டும் என்று அந்தக் கடிதத்தில் கோரப்பட்டுள்ளது.
இதேநேரம், கடந்த ஓகஸ்ட் மாதம் இடம்பெற்ற கல்விப் பொது தராதர உயர்தரப் பரீட்சையின் விடைத்தாள் திருத்தப் பணிகளில் பங்கேற்ற ஆசிரியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு வழங்கப்பட வேண்டிய கொடுப்பவு தற்போதுவரை வழங்கப்படவில்லை என்றும் பரீட்சைகள் ஆணையாளருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் ஆசிரியர் சேவை சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435