பலாங்கொடை ஆசிரிய உதவியாளர் கொடுப்பனவில் பாரபட்சம்

பலாங்கொடை கல்வி வலயத்திற்குட்பட்ட தமிழ் பாடசாலைகளில் நியமிக்கப்பட்ட ஆசிரியர் உதவியாளர்களுக்கான கொடுப்பனவு இது வரை பத்தாயிரமாக அதிகரிக்கப்பட்டு வழங்கப்படவில்லை என்று விசனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏனைய மாவட்டங்களில் நியமிக்கப்பட்டுள்ள ஆசிரிய உதவியாளர்களுக்கு ஆறாயிரமாக இருந்த கொடுப்பனவு மேலும் நான்காயிரம் ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு பத்தாயிரமாக வழங்கப்படுகிறது. எனினும் பலாங்கொடை கல்வி வலயத்தில் நியமிக்கப்பட்ட ஆசிரியர் உதவியாளர்களுக்கு ஆரம்ப கொடுப்பனவே தொடர்ந்தும் வழங்கப்பட்டு வருவதாக ஆசிரிய உதவியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இது தொடர்பில் கவனம் செலுத்தி விரைவில் தமக்கான கொடுப்பனவை உரிய முறையில் வழங்க ஆவண செய்யுமாறும் ஆசிரிய உதவியாளர்கள் கோரியுள்ளனர்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435