பல்கலைக்கழக கட்டமைப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்க 11 நிபந்தனைகள்

நிபந்தனைகள் பலவற்றின் கீழ் நேற்று (06) தொடக்கம் பல்கலைக்கழக கட்டமைப்பு மாணவர்களுக்காக திறக்கப்பட்டதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சிரேஸ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்தள்ளார்.

பல்கலைக்கழகங்களில் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டமை தொடர்பாக நேற்று அரசாங்க தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் பேராசிரியர் இந்த விடயங்களைக் குறிப்பிட்டார்.

இதற்கு அமைவாக கடந்த ஜுன் 15 மற்றும் 22 ஆம் திகதிகளில் மருத்துவ பீட மாணவர்கள் மற்றும் இறுதியாண்டு மாணவர்களுக்கு பல்கலைக்கழக கட்டமைப்பு திறக்கப்பட்டது. நேற்று தொடக்கம் 2 ஆம் மற்றும் 3 ஆம் வருட மாணவர்களுக்கு பல்கலைக்கழக கட்டமைப்பு திறக்கப்பட்டது. இதற்கு அமைவாக அந்த நிபந்தனைகளுக்கு உட்பட்ட வகையில் அந்தந்த பல்கலைக்கழகங்களின் பீடாதிபதிகளுக்கு மாணவர்களை அழைப்பதற்கு முடியும் என்றும் பேராசிரியர் சம்பத் அமரதுங்க மேலும் குறிப்பிட்டார்.

பல்கலைக்கழகங்களில் அனைத்து மருத்துவ பீடங்களில் இறுதி பரீட்சை நடவடிக்கைகள் ஜுன் மாதம் 15ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டதுடன், இந்த பரீட்சை நடத்தும் செயற்பாடுகள் தற்பொழுது நிறைவடைந்து வருகிறது.

இதேபோன்று கொவிட் 19 தொற்றை தடுப்பதற்கான விசேட உறுதிப்பாடுகளை கடுமையாக கடைபிடிப்பதற்கு உட்பட்ட வகையில் , தேசிய பல்கலைக்கழக கட்டமைப்பிற்குட்பட்ட அனைத்து பல்கலைக்கழகங்களிலும் கல்வி நடவடிக்கைகளை மீள ஆரம்பிப்பதற்குறு ஜீலை 06 முதல் பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவினால் அனுமதி வழங்கப்பட்டதாக அந்த ஆணைக்குழுவின் தலைவர் முதுநிலை பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.

இதில் அந்தந்த பல்கலைக்கழகங்களில் கல்வி பீடங்கள் மற்றும் அந்த பீடங்களுக்கான கல்வியாண்டுகள் ஆரம்பிக்கப்படும் தினம் எப்பொழுது ஆரம்பிக்கப்படும் என்பது அந்தந்த பல்கலைக்கழகங்களின் உபவேந்தர்களினால் தீர்மானிக்கப்பட்டு தனித்தனியாக அறிவிக்கப்படும்.
பல்கலைக்கழகங்களை மீள ஆரம்பிக்கும் பொழுது தேசிய பல்கலைக்கழக கட்டமைப்பிற்குட்பட்ட அனைத்து பல்கலைக்கழகங்களிலும் கல்வி மற்றும் பல்கலைக்கழக பணியாளர் சபையினர் மற்றும் மாணவர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரினால் கீழ்காணும் வழிகாட்டி ஆலோசனைகள் மற்றும் உறுதிப்பாடுகள் கடைபிடிக்கப்படுவது அவசியமாகும்.

இதற்கு அமைவாக பல்கலைக்கழகங்களின் கல்வி நடவடிக்கை கீழ் கண்ட 11 நிபந்தனையின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும்.

01. ஒவ்வொரு பீடங்களுக்கும் ஒரு முறைக்கு பல்கலைக்கழகங்களுக்கு அழைக்கக்கூடியவர்கள் கல்வியாண்டு 02 மாணவர்கள் மாத்திரமாகும். அதில் இறுதி ஆண்டு மற்றும்; 3 ஆம் வருடங்களாயின் மிகவும் பொருத்தமானதாகும்.

02. விடுதி வசதிகளைக்கொண்டுள்ள மாணவர்களுக்கு ஒரு மாணவருக்கு ஒரு அறை என்ற வீதம் வழங்கவேண்டும். பரீட்சை , விரிவுரை மண்டபங்களில் நடைமுறை வகுப்புக்கள், நூல் நிலையம் ,ஆய்வுகூட வசதி பயன்பாடு மற்றும் நடைமுறை வகுப்புக்களில் கலந்துகொள்வது போன்ற விடயங்களின் Nபுhது 1 மீற்றர் இடைவெளியை முன்னெடுப்பது கட்டாயமாகும்.

03. பல்கலைக்கழகங்களை மீண்டும் ஆரம்பிக்கும் பொழுது கல்வியாண்டுக்கான விரிவுரை மற்றும் நடைமுறை வகுப்பை பூர்த்தி செய்து நேரடியாக பரீட்சைக்களில் கலந்துகொள்ளும் பரீட்சார்த்தி மாணவர்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்படவேண்டும்.

04. பரீட்சைகள் நடத்தப்படுவதற்கு முன்னர் நடத்தப்படும் எத்தகைய கல்வி நடவடிக்கைகளின் போதும் (விரிவுரை, நடைமுறை வகுப்பு) முடியுமானளவு காலத்தை குறைக்க நடவடிக்கை மேற்கொள்வதுடன் ஆகக்கூடிய வகையில் எத்தகைய காரணங்களினாலும் 4 வாரத்திற்கு மேற்படாதவாறு இது அமைய வேண்டும்.

05. இறுதி ஆண்டில் மருத்துவ பீட கற்கைநெறிகளை தொடரும் மாணவர்களுக்கு (ஆடீடீளு) செய்முறைப் பயிற்சியை ஆரம்பிக்க முடியும். இதற்காக சம்பந்தப்பட்ட மருத்துவபீட, போதனா வைத்தியசாலை பணிப்பாளர்கள் நுண்ணுயிரியலாளர்கள் , பேராசிரியர்கள், ஆலோசகர்கள் மற்றும் பொதுச்சுகாதார பரிசோதகர்களின் ஆலோசனைகள் பெற்றுக்கொள்ளப்பட வேண்டும்.
06. இதேபோன்று பல் வைத்தியம் மற்றும் ஆயர்வேத இறுதி ஆண்டு மாணவர்களுக்கு (டீனுளுஇடீயுஆளுஇடீளுஆளு) மேற்குறிப்பிட்ட இல 6 இல் தெரிவிக்கப்பட்ட முறைக்கு அமைவாக தமது பயிற்சி நடவடிக்கைகளை ஆரம்பிக்க முடியும்.

07. கல்வி மற்றும் பரீட்சை நடவடிக்கைகள் நிறைவடைந்தவுடன் மாணவர்கள் பல்கலைக்கழகங்களில் இருந்து தமது வீடுகளுக்கு செல்ல வேண்டும். அத்தோடு எந்த காரணத்தைக் கொண்டும் பல்கலைக்கழகத்தில் தங்கியிருக்கக் கூடாது. பல்கலைக்கழக வளவில் இரவு 7.00 மணிக்கு பின்னர் எந்த காரணத்தைக் கொண்டும் மாணவர்கள் ஒன்று கூடுவதற்கு அனுமதி இல்லை.

08. விளையாட்டு, சமூக பணி அல்லது எத்தகைய ஒன்று கூடலுக்கும் பல்கலைக்கழக மாணவர்களுக்கு அனுமதி வழங்கப்படமாட்டாது.

09. விடுதிகளிலுள்ள வசதிகள் தொடர்பாக கவனம் செலுத்தி ஒருமுறைக்கு பல்கலைக்கழகங்களுக்கு அழைக்க வேண்டிய மாணவர்கள் எண்ணிக்கை தொடர்பில் மதிப்பீடுகளை மேற்கொண்ட பின்னர் கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிக்க வேண்டும் என்று அனைத்து உபவேந்தர்களுக்கும் ஆலோசனை வழங்கப்படும்.

10. உயர் கல்வி நிறுவனத்திற்காக சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்ட சுகாதார பாதுகாப்பு ஆலோசனைகளை உள்ளடக்கிய சுற்றறிக்கை தொடர்ந்தும் செல்லுபடியானதாகும்.

11. பல்கலைக்கழக நடவடிக்கைகள் செயல்திறன் மிக்கதாக முன்னெடுப்பதற்கு தேவைப்படும் கல்வி மற்றும் கல்விசார் அலுவலக பணியளர்கள் எண்ணிக்கையை தீர்மானிப்பதற்கு அனைத்து உபவேந்தர்களுக்கும் அதிகாரம் வழங்கப்படும்.

இதற்கு அமைவாக இந்த நிபந்னைக்கு அமைய பல்கலைக்கழக கட்டமைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்று தெரிவித்த பேராசிரியர் சம்பத் அமரதுங்க கொவிட் 19 தொற்று நாட்டுக்குள் பரவியதனால் கடந்த மார்ச் மாதம் 13 ஆம் திகதி பல்கலைக்கழகங்கள் மூடப்பட்ட போதிலும் இணையத்தளம் மூலமான கல்வி நடவடிக்கைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

மூலம் : News.lk

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435