பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்த திட்டம்

அனைத்து பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்கள் 12ஆம் திகதி நள்ளிரவு தொடக்கம் எதிர்வரும் 14ஆம் திக நள்ளிரவு வரையிலான 48 மணிநேர வேலை நிறுத்தத்தை நடத்த தீர்மானித்துள்ளனர்.

நாட்டிலுள்ள 15 பல்கலைக்கழகங்கள், 2 உயர் கல்வி நிறுவனங்கள் என்பவற்றைச் சேர்ந்த கல்வி சாரா ஊழியர்களே இவ்வார்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளார்கள் என்று அனைத்து பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்களின் சம்மேளத்தின் தலைவர் எட்வட் மல்வத்தகே தெரிவித்துள்ளார்.

மாதாந்த கொடுப்பனவு வழங்க கோரியும் சம்பள முரண்பாட்டை தீர்க்கக் கோரியும் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த 48 மணிநேர வேலைநிறுத்தத்தில் உரிய பலன் கிடைக்காத பட்சத்தில் எதிர்வரும் 27ஆம் திகதி தொடக்கம் தொடர் வேலைநிறுத்தில் ஈடுபட போவதாக மல்வத்தகே தெரிவித்தார்.

இது தொடர்பில் உரியவர்களுக்கு தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

வேலைத்தளம்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435