பாடசாலை மீள ஆரம்பிப்பது தொடர்பான விபரம்

கொவிட்-19 காரணமாக கடந்த மார்ச் மாதம் 13 ஆம் திகதி மூடப்பட்ட பாடசாலைகளை நான்கு கட்டங்களாக திறப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

கொழும்பில் இன்று பிற்பகல் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கல்வி அமைச்சர் டளஸ் அழகப்பெரும இந்த அறிவித்தலை வெளியிட்டார்.

முதல் கட்டம் ஜூன் மாதம் 29 ஆம் திகதி முதல் ஜூலை 3 வரை

அதிபர்கள், ஆசிரியர்கள், உள்ளிட்டோர் பாடசாலைக்கு அழைக்கப்பட்டு, பாடசாலைகளில் கிருமி தொற்று நீக்கம், மீள் திட்டமிடல் குறித்து கலந்துரையாடல்.

இரண்டாம் கட்டம் ஜூலை 6 முதல் ஜூலை 17 வரை, 5, 11, 13 ஆகிய தரங்களுக்காக பாடசாலைகள் திறக்கப்படவுள்ளன.

மூன்றாம் கட்டம் ஜூலை 20 முதல் 24 வரை 10 மற்றும் 12 தரங்களுக்காக பாடசாலைகள் திறக்கப்படவுள்ளன.

நான்காம் கட்டம் ஜூலை 27 முதல் 3, 4, 6, 7, 8, 9 ஆகிய தரங்களுக்காக பாடசாலைகள் திறக்கப்பட உள்ளதாக கல்வி அமைச்சர் டளஸ் அழகப்பெரும தெரிவித்தார்.

முதலாம் மற்றும் இரண்டாம் தர மாணவர்களுக்காக பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது குறித்து இதுவை தீர்மானிக்கவில்லை.

கல்விப் பொது தராதர உயர்தரப் பரீட்சையை செப்டம்பர் மாதம் 7 ஆம் திகதி முதல் ஒக்டோபர் மாதம் 2 ஆம் திகதிவரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 13 ஆம் திகதி நடத்தப்பட உள்ளதாக கல்வி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435