பாதுகாப்பற்ற நிலையில் தோட்டத் தொழிலாளர்கள்

பெருந்தோட்ட பகுதியில் தேயிலை மலையில் தொழில் செய்யும் தொழிலாளர்கள் பாதுகாப்பற்ற நிலையில் தொழில் செய்து வருவதாக தோட்ட தொழிலாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

தோட்ட தொழிலாளர்கள் மழை, வெயில் பாராமல் தங்களுடைய வருமானத்திற்காக ஒவ்வொரு நாளும் தொழில் செய்யும் இடத்தில் பல இடர்களை சந்தித்து வருவதாக இவர்கள் தெரிவிக்கின்றனர்.

குறிப்பாக மலையக பகுதியில் தொடர்ச்சியாக குளவி கொட்டுக்கு இலக்காகும் தொழிலாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை காணக்கூடியதாக உள்ளது.

இவ்வாறு குளவி கொட்டுக்கு இலக்காகி வரும் தொழிலாளர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையின் பின் வீடு திரும்பினாலும் வருமான ரீதியாக பாதிக்கப்படுவதாக தொழிலாளர்கள் அங்கலாய்க்கின்றனர்.

இவ்வாறு பாதிக்கப்படும் தொழிலாளர்களுக்கு தோட்ட நிர்வாகத்தால் முறையான சலுகையும் வழங்கப்படுவதில்லை.

மாறாக அன்றைய தினம் மாத்திரமே சம்பளத்தை வழங்கும் தோட்ட நிர்வாகத்தினர் தொழிலாளர்கள் 2 அல்லது 3 நாட்கள் தொடர்ச்சியாக வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெறும் பட்சத்தில் அவர்களுக்கு எந்த சலுகைகளும் வழங்கப்படுவதில்லை.

தேயிலை செடிகளில் குளவிகள் கூடுகள் கட்டியுள்ளதால் அப்பகுதியில் தொழிலாளர்கள் கொழுந்து பறிக்கும் பொழுது அச்சத்திற்குள்ளாகின்றனர்.

குளவி கொட்டும் பொழுது தப்பித்து ஓட முடியாத அளவிற்கு சிலர் உபாதைகளுடன் இருப்பதாகவும், இதனால் சிலர் உயிரிழக்க வேண்டிய சந்தரப்பங்களும் ஏற்படுவதாகவும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

குறிப்பாக நுவரெலியா மாவட்டத்தில் உள்ள தோட்ட தேயிலை மலைகளில் குளவிகளை அப்புறப்படுத்துவதற்கு அல்லது அதிலிருந்து தொழிலாளர்களை காப்பாற்றுவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்ற போதிலும் அதற்கு அத்திட்டம் உகந்ததாக இல்லை.

தோட்ட தொழிலாளர்களின் வருமானத்தை மாத்திரம் நோக்காக கொண்டு செயற்படும் அதிகாரிகள் தொழிலாளர்களின் பாதுகாப்பில் கூடிய அக்கறை செலுத்துவது கட்டாயமாகும்.

நாட்டில் பல்வேறுப்பட்ட தொழில்களை மேற்கொள்ளும் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு திட்டங்கள் ,காப்புறுதி திட்டங்கள் இருக்கும் நிலையில் மிகவும் ஆபத்தான தொழிலை மேற்கொள்ளும் தோட்ட தொழிலாளர்களுக்கு எவ்விதமான பாதுகாப்பு திட்டங்களும் மேற்கொள்ளப்படுவதில்லை.

இதனால் தோட்ட தொழிலாளர்கள் தங்களுடைய தொழிலை மேற்கொள்வதில் பாரிய இன்னல்களுக்கு முகங்கொடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

வேலைத்தளம்/ தினகரன்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435