பிரித்தானியாவில் இருந்து தாயம் திரும்பிய 278 இலங்கையர்கள்

இலங்கைக்கு வர முடியாமல், பிரித்தானியாவில் சிக்கியிருந்த இலங்கையர்கள் 278 பேரை ஏற்றிய ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸின் விசேட விமானமொன்று, லண்டன் நகரிலிருந்து இன்று (07) அதிகாலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது.

பிரித்தானியாவின் லண்டன் நகரிலுள்ள ஹீத்ரோ விமான நிலையத்திலிருந்து, ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸின் UL 504 எனும் விசேட விமானம் மூலம் இப்பயணிகள் இன்று அதிகாலை 2.51 மணிக்கு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

இவ்வாறு வருகை தந்த பயணிகளும், விமானப் பணியாளர்களும் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்ததும், PCR பரிசோதனைக்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அவர்களின் இப்பரிசோதனை முடிவுகள் கிடைக்கும் வரை, அவர்களை கட்டுநாயக்க விமான நிலையத்தை அண்டியுள்ள 04 ஹோட்டல்களில் தங்க வைப்பதற்கு, விமான நிலைய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

மூலம் – தினகரன்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435