புதிய போக்குவரத்து ஒழுங்குவிதி இன்று முதல் அமுலில்

போக்குவரத்து ஒழுங்கை விதிகள் இன்று (10) முதல் கட்டாயமாக அமுலாக்கப்படுவதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

போக்குவரத்து ஒழுங்கை விதிகளை சாரதிகள் பழகிக் கொள்வதற்காக ஏற்கனவே 2 வாரகால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது.

இதற்கமைய, இன்று முதல் போக்குவரத்து ஒழுங்கை விதிகள் கட்டாயமாக பின்பற்றப்பட வேண்டும் என்று பொலிஸ் பேச்சாளர் சாரதிகளுக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.

மோட்டார் வாகன போக்குவரத்து சட்டத்தின் 148 ஆவது சரத்தின் பிரகாரம், வாகனங்கள் வீதியின் இடது பக்கத்தில் பயணிக்க வேண்டும்.

ஏதாவது ஒரு வாகனத்தை முந்திச் செல்வதானால் அல்லது வலது பக்கமாக வாகனத்தை திருப்ப வேண்டுமானால் மாத்திரமே, வாகனத்தை வலது பக்க ஒழுங்கையில் செலுத்த வேண்டும்.

இல்லாவிட்டால், இடது பக்க ஒழுங்கையிலேயே வாகனம் பயணிக்க வேண்டும் என பொலிஸ் பேச்சாளர் கூறியுள்ளார்.

இதேநேரம், பஸ் முன்னுரிமை ஒழுங்கை விதியும் அமுல்படுத்தப்படுகிறது.

இதற்கமைய, காலி வீதியில், மொறட்டுவை முதல் கொழும்பு வரை, நாடாளுமன்ற சுற்றுவட்டம் – ஆயர்வேத சுற்றுவட்டம் – பொறளை – மருதானை – புறக்கோட்டைவரை பஸ் முன்னுரிமை ஒழுங்கை விதியை பின்பற்ற வேண்டும் என்றும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

இதேவேளை. ஆறு வீதி விதிமீறல்களுக்காக ஆகக் குறைந்த அபராதத்தை 25 ஆயிரம் ரூபாவாக அதிகரிப்பது தொடர்பான சட்டத் திருத்தத்திற்கு நாடாளுமன்றம் அங்கீகாரம் வழங்கியது.

சாரதி அனுமதிப்பத்திரமின்றி வாகனம் செலுத்துதல். தொடருந்து வழித்தடத்தில் பாதுகாப்பற்ற முறையில் வாகனம் செலுத்துதல். மதுபானம் மற்றும் போதைப்பொருளை பயன்படுத்திய நிலையில் வாகனம் செலுத்துதல், அனுமதிக்கப்பட்ட காப்புறுதிப் பத்திரமின்றி வாகனம் செலுத்துதல் உள்ளிட்ட விதிமீறல்களுக்கான குறைந்தபட்ச அபராதம் 25 ஆயிரம் ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

மதுபோதையில் வாகனம் செலுத்தி விபத்துக்குள்ளாவதனால் ஏற்படும் உயிரிழப்பிற்காக அறவிடப்படும் அபராதத்தை ஒரு இலட்சம் ரூபாவிருந்து, ஒரு இலட்சத்து 50 ஆயிரம் ரூபாவாக அதிகரிக்கப்படவுள்ளதுடன், இரண்டு ஆண்டுகளுக்கு குறையாத சிறைத் தண்டனையும், சாரதி அனுமதிப் பத்திரத்தை இரத்துச் செய்யவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.

இதேநேரம், அதிக வேகத்துடன் வாகனம் செலுத்தும் விதிமீறலுக்காக நான்கு வேக பிரிவுகளின் அடிப்படையில் 3 ஆயிரம் ரூபா முதல் 25 ஆயிரம் ரூபா வரை அபராதம் அறவிடப்படவுள்ளது.

இந்தச் சட்டம் விரைவில் அமுலுக்கு வரவுள்ளதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435