புத்தளத்தில் விவசாய நடவடிக்கைகள் பாதிப்பு

புத்தளம் – கடுபிட்டிய ஓயவில் உப்பு நீர் கலந்துள்ளமையினால் விவசாய செய்கையை மேற்கொள்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக அப்பிரதேச விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

சுமார் 500 ஏக்கர் அளவு வயல் நிலத்தில் குறித்த காரணத்தினால் பயிர்ச்செய்கையை மேற்கொள்ள முடியாதுள்ளதாக தெரிவித்துள்ள விவசாயிகள் குறித்த வயல் நிலத்தில் ஒரு பகுதியில் கடந்த 20 வருடங்களாக விவசாய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை என்றும் தெரிவித்தார். පුත්තලම –

கடுபிட்டிய ஆற்றில் கடல் நீர் கலந்துள்ளமையினால் இந்நிலை தோன்றியுள்ளது.

மாதம்பே பிரதேசத்தில அமைந்துள்ள தனிபிட்டி குளத்தில் உள்ள மேலதிக நீரை கடுபிட்டி ஓயவிற்கே திறந்து விடப்படுகிறது. நீரை பாதுகாப்பதற்கு எதுவித ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டால் குறித்த பிரதேச விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என்றும் விவசாயிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435