புலம்பெயர் தொழிலாளர்களுக்கு இலவச இணையதள வசதி

கட்டாரில் பணியாற்றும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு எதிர்வரும் 2018ம் ஆண்டு தொடக்கம் இலவச இணையதள வசதியை ஏற்படுத்திக்கொடுக்க அந்நாட்டு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

கட்டாரில் சுமார் 1.5 மில்லியன் புலம்பெயர் தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர். அவர்களுக்கு நன்மைபயக்கும் வகையில் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அண்மையில் கட்டாரில் நடைபெற்ற தொழிலாளர் நலன்புரி மாநாட்டில் தொழிலாளர்களுக்கு இலவச இணையளத வசதிகளை வழங்குவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது. குறித்த இலவச இணையதள வசதியை (WiFi) அந்நாட்டு போக்குவரத்துதுறை அமைச்சு வழங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இவ்வசதிகளை வழங்குவதற்கு 1500 தகவல் தொழில்நுட்ப அறைகள் மற்றும் நவீன வசதிகளுடன் கூடிய 15,000 கணனிகள் தேவையாக உள்ளது என்று அந்நாட்டு பொது டிஜிட்டல் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

இத்திட்டம் அரசாங்க திணைக்களங்கள் மற்றும் தனியார் துறைகளுக்குள் உள்ள தகவல் தொழில்நுட்ப அறைகளை நவீனமயப்படுத்திய பின்னர் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

இவ்வசதியானது வௌிநாட்டு தொழிலாளர்கள் அவர்களுடைய குடும்பங்களுடன் நெருங்கிய தொடர்பை பேணுவதற்கு வசதியாக இருக்கும் என்று தாம் நம்புவதாக கட்டார் அரசு தெரிவித்துள்ளது.

வேலைத்தளம்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435