பெண்ணை விபசாரத்திற்கு விற்ற நபருக்கு ஆயுள் தண்டனை!

பிலிப்பைன் பெண்ணொருவரை கடத்தி பாலியல் துஷ்பிரயோகம் செய்த பின்னர் விபசாரத்திற்காக விற்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இரு பங்களாதேஷ் பிரஜைகள் தமது குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளனர். இதனையடுத்து அவர்களுக்கு ஆயுள்தண்டனை விதித்து டுபாய் நீதிமன்றம் தீர்ப்பிட்டுள்ளது அந்நாட்டுப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அறிமுகமில்லாத மனிதனிடம் வீட்டுக்குச் செல்வதற்காக வாகனத்தில் ஏறிய பிலிப்பைன் நாட்டைச் சேர்ந்த பெண்ணையே இவ்வாறு துஷ்பிரயோகம் செய்ததுடன் அவரிடமிருந்த பணம், பொருட்களை அபகரித்ததுடன் பாலியல் தொழிலுக்காக விற்றுள்ளனர்.

32 வயதான குறித்த பெண் அல் குவோஸ் பிரதேசத்தில் வைத்து குறித்த வாகனத்தில் ஏறியுள்ளார்.

மூவர் இணைந்து அப்பெண்ணை துஷ்பிரயோகம் செய்ததுடன் 3000 தினார்களுக்கு விற்பனை செய்துள்ளனர். அவர்களிடமிருந்த தப்பி வந்த பெண் அயலவர்களின் உதவியுடன் பொலிஸுக்கு அறிவித்துள்ளார்.

இக்குற்றத்துடன் தொடர்புபட்ட மற்றொரு நபரை பொலிஸார் தேடி வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

வேலைத்தளம்/ த நேஷன்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435