பொலிஸாரின் சம்பளம் 40சதவீதத்தினால் அதிகரிப்பு

பொலிஸாரின் சம்பளம் 40 சதவீதத்தினால் அதிகரிக்கப்பட்டதாக காவல்துறை மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

கம்பஹா பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

பொலிஸார் மிகுந்த நெருக்கடியில் வாழ்கின்றவர்கள். அவர்களின் உரிமைகள் தொடர்பில் பேசுவதற்கு தொழிற்சங்கங்கள் இல்லை. கடமைகளை தவிர்த்து செயற்படும் சந்தர்ப்பம் அவர்களுக்கு ஒருபோதும் வழங்கப்படுவதில்லை. ஓய்வு நாட்கள் காவல்துறையினருக்கு அரச விடுமுறைகள் மறுக்கப்பட்டுள்ளன. அவர்களுக்கென்று வழங்கப்படுகின்ற விடுமுறைகளும் அவ்வப்போது தடுக்கப்படுகின்றது.

இத்தகைய நிலைகளை கருத்திற்கொண்டு அவர்களின் வேதனம் 40 வீதத்தினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ்மா அதிபர் குறிப்பிட்டுள்ளார்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435