போக்குவரத்துசபை ஊழியர்களுக்கு மேலும் அவகாசம்

இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் சுய விருப்பில் ஓய்வு பெறுவதற்கு மறுபடியும் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

ஓய்வு பெறுபவர்களுக்கு வழங்கப்படும் நட்டஈட்டுத் தொகை அதிகரிக்கப்பட்டதை அடுத்து மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ள இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் ரமல் சிறிவர்தன ஊழியர்கள் எதிர்வரும் 26 ஆம் திகதி வரை ஓய்வு பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம் என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

சுய விருப்பின் அடிப்படையில் ஓய்வுபெறுபவர்களுக்கு ஒரு மாதத்திற்கான கொடுப்பனவு வழங்கப்படுவதுடன் நட்டஈடும் செலுத்தப்படும் என இலங்கை போக்குவரத்து சபைத் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்களுக்கு இந்த விடயம் தொடர்பில் ஏற்கனவே வழங்கப்பட்ட கால அவகாசத்திற்குள் 2900 பேர் இராஜினாமா கடிதங்களை சமர்ப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

வேலைத்தளம்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435