போக்குவரத்து நடவடிக்கை தொடர்பாக தனியார் சங்கத்தின் புதிய முடிவு

நாளை மறுதினம் (21) முதல் தனியார் பேருந்துகளின் போக்குவரத்து நடவடிக்கையினை 50 சதவீதமாக குறைக்கவுள்ளதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவலுடன் தனியார் பேருந்து தொழிற்துறைக்கு ஏற்ப்பட்டுள்ள அழுத்தம் தொடர்பில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் கிடைக்காமைக்கு எதிர்ப்பு தெரிவித்த இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் கெமுனு விஜயரத்ன தெரிவித்துள்ளார்.

தற்போதைய சூழ்நிலைக்கு அமைய தமது தொழிற்துறையை முன்னெடுத்து செல்ல வேண்டுமானால் எரிபொருள் நிவாரணம் அல்லது கட்டணத்தை அதிகரிப்பது அத்தியாவசியம் என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435